
கடந்த மாதம் 100 கிலோ எடை கொண்ட சர்க்கரை மூட்டை ரூ.2,900-க்கும், ஒரு கிலோ ரூ.31-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது, ஒரு மூட்டை சர்க்கரை ரூ.3,900 ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிலோ சர்க்கரை விலை ரூ.10 உயர்ந்து ரூ.41-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், உயரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு 18 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதே நேரத்தில், கரும்பு கொள்முதல் விலையும் டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,200 வரை வழங்கப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து விலை உயர்வைத் தூண்டும் வகையிலான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்ததால்தான் விலை உயர்வு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுஎழுந்துள்ளது.
இதற்கிடையே, அரிசி விலையும் மறுபக்கம் உயரத் தொடங்கியுள்ளது. தென் மேற்குப் பருவ மழை மக்களை மட்டுமல்லாமல் விவசாயிகளையும் கடுமயாக ஏமாற்றி விட்டது. குறிப்பாக நெல் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். விளைச்சல் குறைந்து போய் விட்டது. ஆனால் முட்டாள் மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் அரிசி பெருமளவில் வெளிநாடுகளுக்குப் போகத் தொடங்கியுள்ளது. இதனாலும் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கடந்த மாதம் பொன்னி அரிசி 25 கிலோ ரூ. 1000க்கு விற்றது. தற்போது அது ரூ. 100 கூடியுள்ளது. கடந்த மாதம் ரூ.42-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை பொன்னி அரிசி, தற்போது ரூ.46 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திராவிலும், தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நெல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அரிசி விலை மேலும் மேலும் உயரும் அபாயம் இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்னொரு பக்கம் கோதுமை விலையும் உயர்ந்து வருவதால் மக்கள் விழி பிதுங்கிக் காணப்படுகின்றனர்.
சர்க்கரை விலை உயர்வு, அரிசி விலையும் உயர்வு என்றிருந்த நிலையில் தற்போது கோதுமை விலையும் உயர்வதால் எதைச் சாப்பிடுவது என்ற பெரும் குழப்பத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதேசமயம், பருப்பு விலையில் சரிவு காணப்படுவதால் மக்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications