திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் விளையும் தக்காளி, ஒட்டன்சத்திரம், தேவாரம், சின்னமனூர் சந்தைகள் மூலம் திருச்சி, திருநெல்வேலி, கேரளா, சென்னைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த வாரம், ஒரு பெட்டி தக்காளி (15 கிலோ), 350 ரூபாய்க்கு, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது; இந்த வாரம் வெகுவாக சரிவடைந்துள்ளது.
திருப்பூர் காய்கறி சந்தையில் ஒரு பெட்டி தக்காளி அதிகபட்சமாக, 40 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லறை விலையில் ஒரு கிலோ- 5 ரூபாய் மட்டுமே விற்பனையாகிறது. ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல், தேனி உட்பட மாவட்டங்களில் விளைச்சலும் அதிகம். இதனால் விலை சரிந்துள்ளது, என்று தக்காளி கமிஷன் கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தக்காளி விலை குறைந்துள்ளதால் நுகர்வோர்கள் கிழ்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'ஒரு ஏக்கரில் தக்காளி பயிரிட, 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஒரு பெட்டி தக்காளி, 50 ரூபாய்க்கும் குறைவாக விற்பதால், பறிப்பு கூலி கொடுக்க கூட கட்டுபடியாகவில்லை என்று வியாபரிகள் கூறியுள்ளனர். இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.