கடந்த காலாண்டில் மொத்தமே 100 கிலோ மீட்டர் தொலைவுக்குதான் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் 18 ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்திக்கான திட்டங்களும் தேங்கிப் போய்கிடக்கிறது. இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலை பணிகள், மின் துறை, எரிசக்தி துறை ஆகியவற்றின் துறை செயலர்களுடன் ஆலோசனை நடத்திய ப.சிதம்பரம் இந்தத் துறைகளில் முடங்கிப் போய்கிடக்கும் பணிகளை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தியிருக்கிறார் ப.சிதம்பரம்.
நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவுபடுத்துதல், சுற்றுச் சூழல் அமைச்சக அனுமதிக்காக காத்திருப்பதை முடிவுக்கு கொண்டுவருதல் போன்றவற்றின் மூலம் முதலீட்டாளர்களுக்கான நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்பது சிதம்பரத்தின் திட்டமாக இருக்கிறது என்கின்றனர் அதிகாரிகள்.
மேலும் இந்த வாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தமது செயல்திட்டங்கள் குறித்த அறிக்கை ஒன்றையும் ப.சிதம்பரம் தாக்கல் செய்யக் கூடும் எனறு கூறப்படுகிறது.
இந்த செயல்திட்ட அறிக்கையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, முதலீட்டுக்கான சூழலை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதார மந்தநிலையை எப்படி எதிர்கொள்ள முடியும் என்பது தொடர்பாக விவரங்கள் இடம்பெறும் என்று நிதிஅமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.