இந்தியா வரும் சுசுகி நிறுவன தலைவர் குஜராத் முதல்வர் மோடியை சந்திக்கிறார்

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குஜராத் முதல்வர் மோடியுடன் சுசுகி நிறுவன தலைவர் அடுத்த வாரம் சந்திப்பு
டெல்லி: இந்தியாவுக்கு வருகை தர உள்ள ஜப்பானின் சுசுகி நிறுவன தலைவர் ஒசமு சுசுகி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

அரியானா மாநிலம் மானேசரில் வன்முறையால் மூடப்பட்ட மாருதி சுசிகி கார் தொழிற்சாலை மீண்டும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படுகிறது. அதற்கு மறுநாள் புதன்கிழமையன்று சுசுகி இந்தியாவுக்கு வருகை தருகிறார். அவர் அரியானா மாநில முதல்வர் பூபேந்தர் சிங் ஹோடாவை சந்தித்துப் பேசுகிறார் அதன் பின்னர் சுசுகி நிறுவனத்தின் மற்றொரு ஆலையை குஜராத்தில் நிறுவுவது குறித்து அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேச உள்ளார். இந்தியாவுக்கான ஜப்பான் தூதரக அதிகாரிகளையும் சுசுகி சந்தித்துப் பேசுகிறார். இதேபோல் மாருதி நிறுவன தலைவரையும் சுசுகி சந்தித்துப் பேசுகிறார்.

இருப்பினும் வன்முறை நிகழ்ந்த மானேசர் ஆலையை அவர் பார்வையிடுகிறாரா? என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Suzuki chief to hold talks with Modi next week | குஜராத் முதல்வர் மோடியுடன் சுசுகி நிறுவன தலைவர் அடுத்த வாரம் சந்திப்பு

The labour troubles at Maruti's Manesar plant and new expansion in Gujarat is expected to top Suzuki chief Osamu Suzuki's agenda when he visits India next week.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X