அரியானா மாநிலம் மானேசரில் வன்முறையால் மூடப்பட்ட மாருதி சுசிகி கார் தொழிற்சாலை மீண்டும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படுகிறது. அதற்கு மறுநாள் புதன்கிழமையன்று சுசுகி இந்தியாவுக்கு வருகை தருகிறார். அவர் அரியானா மாநில முதல்வர் பூபேந்தர் சிங் ஹோடாவை சந்தித்துப் பேசுகிறார் அதன் பின்னர் சுசுகி நிறுவனத்தின் மற்றொரு ஆலையை குஜராத்தில் நிறுவுவது குறித்து அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேச உள்ளார். இந்தியாவுக்கான ஜப்பான் தூதரக அதிகாரிகளையும் சுசுகி சந்தித்துப் பேசுகிறார். இதேபோல் மாருதி நிறுவன தலைவரையும் சுசுகி சந்தித்துப் பேசுகிறார்.
இருப்பினும் வன்முறை நிகழ்ந்த மானேசர் ஆலையை அவர் பார்வையிடுகிறாரா? என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.