Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
சென்னை: இந்துஜா குழுமத்தின் முக்கிய நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம் இந்த ஆண்டில் புதிய நெப்ட்யூன் என்ஜினை அறிமுகப்படுத்துகிறது.
இந்த நெப்ட்யூன் என்ஜின் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. செலவு அதிகம் வைக்காத என்ஜின் என்ற எதிர்பார்ப்பும் இந்த என்ஜினுக்கு உண்டு.
இதுகுறித்து அசோக் லேலண்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் வினோத் தாசரி கூறுகையில், இந்த ஆண்டில் நெப்ட்யூன் அறிமுகமாகும். தற்போது பரிசோதனையில் அது உள்ளது என்றார்.
இந்த என்ஜினை ஏற்கனவே 3 லட்சம் கிலோமீட்டர் அளவுக்கு பரிசோதனை செய்து பார்த்துள்ளது அசோக் லேலண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த என்ஜின் முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே தயாரித்துள்ளது அசோக் லேலண்ட்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Leyland to roll out Neptune engine this year | நெப்ட்யூன் என்ஜினை இந்தாண்டு களம் இறக்குகிறது அசோக் லேலண்ட்!
Story first published: Monday, August 20, 2012, 13:00 [IST]