2008ம் ஆண்டு உலகம் சந்தித்த பொருளாதார சீர்குலைவை முன்பே கணித்துச் சொல்லி பல நாடுகளை எச்சரித்தவர் ராஜன்.
சர்வதேச பொருளாதார நிதியத்தின் (IMF) முன்னாள் தலைமை ஆலோசகராக இருந்த ராஜன், இதற்கு முன் பிரதமரின் கெளரவ ஆலோசகராக இருந்தார்.
அவரை தனது தலைமை பொருளாதார ஆலோசகராக்கியுள்ளார் நிதியமைச்சர் ப.சிதம்பரம். சிதம்பரத்தின் பொருளாதார நிபுணர் குழுவில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார் ராஜன்.
இதற்கு முன் ஆலோசகராக இருந்த கெளசிக் பாசுவின் பதவிக் காலம் கடந்த மாதம் முடிவடைந்தது. இதையடுத்து ராஜனை அந்தப் பதவிக்கு இழுத்து வந்துள்ளார் சிதம்பரம். இவர் நாளை பொறுப்பை ஏற்கவுள்ளார்.
டெல்லி ஐஐடியில் பிடெட் எலெக்ட்ரிகல் என்ஜினியரிங் படித்த இவர் அகமதாபாத் ஐஐஎம்-ல் எம்பிஏ பயின்றர். அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பிஎச்டி முடித்தவர்.
மத்தியப் பிரதேசம் போபாவில் பிறந்த இவர், உலக வங்கி, அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் (ரிசர்வ் வங்கி) இயக்குனர் குழு, சுவீடன் நாடாளுமன்றக் குழு ஆகியவற்றின் ஆலோசகராகவும் உள்ளார்.
உலகின் முன்னணி பொருளாதார சிந்தனையாளர்களில் ஒருவர் என Foreign Policy magazine பத்திரிக்கையால் வர்ணிக்கப்படுவர் ராஜன்.