
2011-12-ம் ஆண்டுக்கான ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வேதாந்தா குழுமம் 2.01 மில்லியன் அமெரிக்க டாலர்களை அரசியல் கட்சிகளுக்கு கொடுத்திருப்பதாகக் கூறியுள்ளது. அதற்கு முன்பு 2009-10ம் ஆண்டில் 3.66 மில்லியன் டாலரை நாடு பொதுத்தேர்தலை எதிர்நோக்கியிருந்த போது அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக கொடுத்திருக்கிறது வேதாந்தா குழுமம்.
வேதாந்த குழுமம் லண்டன் பங்குச் சந்தையில் பட்டியிலட்டப்பட்ட 2003-04 ஆம் ஆண்டு காலத்தில் மொத்தம் 8.29 மில்லியன் டாலர்களை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக இதே வேதாந்தா நிறுஅனம் வழங்கியிருக்கிறது அதன் பின்னர் 2006-07, 2008-09 ஆம் ஆண்டுகாலப் பகுதிகளில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் எந்த ஒரு நன்கொடையும் இக்குழுமம் கொடுக்கவில்லை.
அரசியல் கட்சிகளுக்கு நேரடியாகவோ அல்லது அவை சார்ந்த அறக்கட்டளைகள் மூலமாகவோ இந்த நன்கொடைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வேதாந்தா குழுமத்தின் போர்டும் இந்த நடவடிக்கைக்கு ஒப்புதலைத் தெரிவித்திருக்கிறது.
இப்படி கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தால் வேதாந்தாவுக்கு எதிராக எந்த அரசியல் கட்சிதான் போர்க்கொடி தூக்கும்?


Click it and Unblock the Notifications