முகத்தில் கரி பூசி நிற்கும் மத்திய அரசு: கேஸ்-டீசல் விலை உயர்வை ஒத்தி வைத்தது!

By Chakra
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் கரி பூசி நிற்கும் மத்திய அரசு: கேஸ்-டீசல் விலை உயர்வை ஒத்தி வைத்தது!
டெல்லி: நிலக்கரி ஊழல் விவகாரத்தில் எதிர்க் கட்சிகளிடம் சிக்கித் தவித்து வரும் சூழ்நிலையில், சமையல் கேஸ்- டீசல் விலை உயர்வை மத்திய அரசு ஒத்தி வைத்துவிட்டது.

அரசியல் சூழ்நிலை சாதகமாக இல்லாததால் இந்த நிலைமைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.

டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை கடந்த ஆண்டு ஜுன் மாதத்துக்குப் பின்னர் இதுவரை உயர்த்தப்படவில்லை. டீசலை அதன் உண்மையான விலையில் இருந்து லிட்டருக்கு ரூ.15.55 குறைவாகவும், மண்ணெண்ணெயை ரூ.29.97 தள்ளுபடி விலையிலும், சமையல் கேஸ் சிலிண்டரை ரூ.231 விலையைக் குறைத்தும் விற்பனை செய்து வருவதால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் ரூ.450 கோடி இழப்பை சந்தித்து வருகின்றன.

இதனால் இவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசை அந்த நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் வரும் 7ம் தேதி முடிந்த பின்னர் இவற்றின் விலை உயர்த்தப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால், இப்போது மத்திய அரசு ரூ.1.86 லட்சம் கோடி நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையில், அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இப்போதைக்கு டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விலையை உயர்த்துவதில்லை என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது.

இது குறித்து மூத்த பெட்ரோலியத்துறை அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில் எரிபொருட்கள் விலையை உயர்த்துவது என்பது மிக மிக கடினமான ஒன்று. தற்போதைய சூழலில், இந்த விலை உயர்வு சாத்தியம் இல்லை என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Diesel, LPG rates not to go up as government fights political battle | முகத்தில் கரி பூசி நிற்கும் மத்திய அரசு: கேஸ்-டீசல் விலை உயர்வை ஒத்தி வைத்தது!

Diesel and cooking gas (LPG) prices are unlikely to be hiked even after the end of the Monsoon Session of Parliament next week as the government is wary of taking such a decision at a time when it already has political battles on hand. Diesel, domestic LPG and PDS kerosene rates, which have not been revised since June last year, were expected to be raised after the Parliament session ends on September 7.
Story first published: Friday, August 31, 2012, 11:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X