சம்பளம் தராத கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சி.இ.ஓவின் ஊதியம் 2 மடங்கானது.. ரூ.4.01 கோடி!

சம்பளம் தராத கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சி.இ.ஓவின் ஊதியம் 2 மடங்கானது.. ரூ.4.01 கோடி!
டெல்லி: பைலட்கள், விமான சிப்பந்திகள், அலுவலக ஊழியர்கள், எண்ணெய் நிறுவனங்கள், விமான நிலையங்களுக்கு சம்பள பாக்கியும், கட்டண பாக்கியும் வைத்துள்ள விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனம் தனது தலைமை செயல் அதிகாரியான (CEO) சஞ்சய் அகர்வாலின் ஆண்டு ஊதியத்தை ரூ. 2.12 கோடியிலிருந்து இரண்டு மடங்காக்கி ரூ. 4.01 கோடியாக உயர்த்தியுள்ளது.

அதே நேரத்தில் இந்த நிறுவனத்திலிருந்து கடந்த நிதியாண்டில் விலகியோரின் எண்ணிக்கை 1,651 ஆகியுள்ளது. இதன்மூலம் கடந்த ஓராண்டில் 22 சதவீதம் ஊழியர்கள் வேலையை விட்டு விலகியுள்ளனர். இப்போது இதில் 5,696 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதிய செலவு ரூ. 669.5 கோடியாகும்.

மேலுமம் கடந்த 2011-12ம் ஆண்டில் கிங்பிஷரின் நஷ்டம் இரண்டு மடங்காகி ரூ. 2,328 கோடியாகியுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த நிறுவனம் ரூ. 1,027 நஷ்டத்தை சந்தித்தது.

இந்த நிறுவனத்தின் கடன் அளவு ரூ. 8,030 கோடியாக உள்ளது. இதில் ரூ. 5,904 கடனுக்கு மல்லையா ஜாமீன் தந்துள்ளார்.

இந்த விவரங்கள் அந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த நிதியாண்டில் விஜய் மல்லையாவுக்கு கிங்பிஷர் நிறுவனம் எந்த கமிஷனோ, ஊதியமோ தரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+