புவனேஸ்வர்: ஒடிஷாவின் லாஞ்ஜிகரில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்தின் அலுமினிய நிறுவனத்தை டிசம்பர் 5-ந் தேதி முதல் தற்காலிகமாக மூடப்போவதாக மாநில அரசுக்கு அந்நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒடிஷாவில் லாஞ்ஜிகரில் அமைக்கப்பட்டிருக்கும் வேதாந்தா அலுமினிய நிறுவனத்துக்கு நாளொன்றுக்கு 10 ஆயிரம் டன் பாக்சைட் தாது தேவைப்படுகிறது. தற்போதுவரை இந்த பாக்சைட் தாது ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்துதான் பெறப்பட்டு வருகிறது. லாஞ்ஜிகரையொட்டிய நியாம்கிரி மலைப்பகுதியில் பாக்சைட் தாது கிடைத்தாலும் நக்சலைட்டுகளின் ஆதரவுடனான பழங்குடி மக்களின் போராட்டத்தால் பாக்சைட் தாது வெட்டி எடுக்கப்படாமல் இருக்கிறது.
இந்த நிலைமையை தமது நோட்டீசில் சுட்டிக்காட்டியிருக்கும் வேதாந்தா நிறுவனம் டிசம்பர் 5-ம் தேதி முதல் தற்காலிகமாக லாஞ்ஜிகர் தொழிற்சாலையை மூடுவதாகவும் அறிவித்திருக்கிறது.