சனி - ஞாயிறுகளில் பொதுவாக பங்கு வர்த்தகம் கிடையாது. இந்த வாரம் திங்கள் முதல் வியாழன் வரை 4 நாட்களாக வர்த்தகம் சரிவாக இருந்த நிலையில், நேற்று பங்கு வர்த்தகம் முன்னேற்றமான நிலையை அடைந்தது.
இதைத் தொடர்ந்து பங்குகளின் வாங்கும் திறனை அதிகரிக்க இன்று 90 நிமிடம் சிறப்பு வணிகம் நடந்தது.
90 நிமிடம் நடந்த இந்த சிறப்பு வணிகத்தின்போது, எடுத்த எடுப்பிலேயே சென்செக்ஸ் குறியீடு 40.85 புள்ளிகள் உயர்ந்து 17,724.58 என்ற நிலையை அடைந்தது. நிப்டி குறியீடு 8.85 புள்ளிகள் உயர்ந்து 5,350.95 என்ற நிலையில் இருந்தது.
ஒன்றரை மணி நேர வர்த்தகத்துக்குப் பிறகு 48 புள்ளிகள் உயர்வு கண்டது சென்செக்ஸ். சிப்லா, ஸ்டெரிலைட் இன்டஸ்ட்ரீஸ், ஜிந்தால் ஸ்டீல், டாடா பவர் போன்ற பங்குகள் உயர்வு கண்டன. பெல், பார்தி ஏர்டெல் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
நிப்டியில் 9.8 புள்ளிகள் உயர்வு காணப்பட்டது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 17749.65 புள்ளிகளாகவும், நிப்டி 5358.70 புள்ளிகளாகவும் நிலை பெற்றது.