இன்று பங்குச் சந்தை சிறப்பு வர்த்தகம் - 48 புள்ளிகள் ஏற்றம்!

By Shankar
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று பங்குச் சந்தை சிறப்பு வர்த்தகம் - 48 புள்ளிகள் ஏற்றம்!
மும்பை: பங்குகளின் வாங்கும் திறனை அதிகரிக்க இன்று நடத்தப்பட்ட சிறப்பு பங்கு வணிகத்தில் 48 புள்ளிகள் உயர்வு கண்டது சென்செக்ஸ்.

சனி - ஞாயிறுகளில் பொதுவாக பங்கு வர்த்தகம் கிடையாது. இந்த வாரம் திங்கள் முதல் வியாழன் வரை 4 நாட்களாக வர்த்தகம் சரிவாக இருந்த நிலையில், நேற்று பங்கு வர்த்தகம் முன்னேற்றமான நிலையை அடைந்தது.

 

இதைத் தொடர்ந்து பங்குகளின் வாங்கும் திறனை அதிகரிக்க இன்று 90 நிமிடம் சிறப்பு வணிகம் நடந்தது.

 

90 நிமிடம் நடந்த இந்த சிறப்பு வணிகத்தின்போது, எடுத்த எடுப்பிலேயே சென்செக்ஸ் குறியீடு 40.85 புள்ளிகள் உயர்ந்து 17,724.58 என்ற நிலையை அடைந்தது. நிப்டி குறியீடு 8.85 புள்ளிகள் உயர்ந்து 5,350.95 என்ற நிலையில் இருந்தது.

ஒன்றரை மணி நேர வர்த்தகத்துக்குப் பிறகு 48 புள்ளிகள் உயர்வு கண்டது சென்செக்ஸ். சிப்லா, ஸ்டெரிலைட் இன்டஸ்ட்ரீஸ், ஜிந்தால் ஸ்டீல், டாடா பவர் போன்ற பங்குகள் உயர்வு கண்டன. பெல், பார்தி ஏர்டெல் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

நிப்டியில் 9.8 புள்ளிகள் உயர்வு காணப்பட்டது.

வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 17749.65 புள்ளிகளாகவும், நிப்டி 5358.70 புள்ளிகளாகவும் நிலை பெற்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex gains 48 points in early trade during special session | இன்று பங்குச் சந்தை சிறப்பு வர்த்தகம் - 48 புள்ளிகள் ஏற்றம்!

The BSE sensex improved further by 48 points in early trade during a special session today on sustained buying support from investors, mainly in metal, auto, FMCG and PSU counters.
 
Story first published: Saturday, September 8, 2012, 13:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X