ரொக்க கையிருப்பு விகிதத்தை குறைத்தது ஆர்பிஐ: வங்கிகளிடம் ரூ. 17,000 கோடி கூடுதல் நிதி!
ரொக்க கையிருப்பு விகிதத்தை குறைத்தது ஆர்பிஐ: வங்கிகளிடம் ரூ. 17,000 கோடி கூடுதல் நிதி!

மும்பை: வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தை குறைத்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் வங்கி துறைக்கு ரூ.17,000 கோடி கூடுதலாக நிதிப் புழக்கத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கி இன்று காலாண்டு மறு ஆய்வை மேற்கொண்டது. வழக்கம் போல ரிசர்வ் வங்கியிடமிருந்து பிற வங்கிகள் பெறும் டெபாஸிட் தொகைக்காக வட்டி (ரெப்போ ரேட்) விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இதேபோல் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் தொகையிலும் எந்த மாற்றமும் இல்லை. இதனால் வங்கி வாடிக்கையாளர்களுக்கான கடன் விகிதத்தில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது,

அதே நேரத்தில் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதமானது (CRR) 0.25% குறைக்கப்பட்டு 4.5% ஆக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கித் துறைக்கு ரூ17 ஆயிரம் கோடி கூடுதலாக நிதி புழக்கத்தில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது செப்டம்பர் 22-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் தொழில்துறையில் எந்த ஒரு உடனடி மாற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்டில் பணவீக்கம் 7.55 விழுக்காடாக உயர்ந்துள்ளது. நிதிநிலை அறிக்கையில் உள்நாட்டு உற்பத்தி இலக்கு 7.6 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொழில் வளர்ச்சி 9 ஆண்டுகளில் இல்லாத அளவாக 6.5 விழுக்காட்டுக்கு இறங்கி விட்டது. தொழிற்சாலை உற்பத்தி விகிதமும் 0.1 விழுக்காட்டுக்கு அளவுக்கு குறைந்து விட்டது. ஏற்றுமதியும் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மத்திய அரசின் டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதைத் தொடர்ந்து ரூபாய் மதிப்பு உயர்வடைந்திருக்கிறது. பங்குச் சந்தைகள் ஏறுமுகம் கண்டுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+