மும்பை: அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உறுதியாக இருப்பதால் பங்குச் சந்தை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.
இன்று காலை மும்பை பங்குச் சந்தை 300 புள்ளிகள் அதிகரித்து 18,500 குறியீட்டு எண்ணாக இருந்தது. நிப்டியைப் பொறுத்தவரையில் 100 புள்ளிகள் அதிகரித்து 5,650 குறியீட்டு எண்ணாக இருந்தது.
குறிப்பாக ரிலையன்ஸ், பெல், ஆக்ஸிஸ் வங்கி, எல் அண்ட் டி மற்றும் ஐசிஐசி வங்கி ஆகியவற்றின் பங்கு மதிப்புகள் உயர்ந்திருந்தன. பிபிசிஎல் பங்கு மதிப்பு மட்டும் குறைந்திருந்தது.
டீசல் விலை உயர்வு, சிலிண்டர் கட்டுப்பாடு மற்றும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என அடுத்தடுத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்து. நாடு முழுவதும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்த போதும் மத்திய அரசு தமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. கூட்டணிக் கட்சியான திரிணாமுல் அரசிலிருந்து வெளியேறிய போதும்கூட மத்திய அரசு தமது நிலையில் உறுதியாக இருப்பதால் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.