வாஷிங்டன்: அமெரிக்க விசா பெற நடத்தப்படும் நேர்காணலை ரத்து செய்துள்ள திட்டத்திற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரி்ககும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா செல்ல விசா வேண்டும் என்றால் தூதரகத்தில் நேர்காணல் நடத்தப்படும். இந்நிலையில் இந்த நேர்காணலை ரத்து செய்யும் திட்டத்தை அமெரிக்கா கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து கடந்த 6 மாதத்தில் மட்டும் இந்தியாவில் 4,000 விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திட்டம் முதன்முதலாக சீனா மற்றும் பிரேசிலில் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இத்திட்டம் சீனா, பிரேசில் மற்றும் இந்தியாவில் வெற்றி பெற்றதையடுத்து கடந்த ஜூலை மாதம் மெக்சிகோ மற்றும் ஜெர்மனியிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்திற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் அமெரிக்கா செல்ல விசா பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் 30 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.