மம்தா பானர்ஜியால் தான் பொருளாதார சீர்திருத்தங்கள் தாமதமாகின..: குலாம்நபி ஆசாத்

ஸ்ரீநகர்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தாமதமானதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமாகும் என்பதால்தான் மத்திய அரசு டீசல் விலையை உயர்வு மற்றும், மானிய விலை சிலிண்டருக்குக் கட்டுப்பாடு மற்றும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஆகிய முடிவுகளை எடுத்தது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாகவே இத்தகைய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தாமதமாகி வந்தன.

அந்த நிலைமையை நினைக்கனும்...

இந்த முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால், கடந்த 1991-ல் ஏற்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டிருப்போம் என்பதை பிரதமர் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டி உள்ளார். அதாவது, அப்போது ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க கையிருப்பில் இருந்த தங்கத்தை அடகு வைக்க நேர்ந்தது. கடந்த ஆண்டிலேயே சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அப்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த முடிவை மத்திய அரசு தாற்காலிகமாக ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

300 எம்.பி.க்கள் ஆதரவு

மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருபவர்களையும் கணக்கில் கொண்டால் 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது. 545 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பெரும்பான்மைக்கு 273 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. எங்களுக்கு அதற்கும் அதிக உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றார் அவர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+