இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் கடும் போட்டி நிலவுகிறது. வள்ளூர், வடசென்னை, மேட்டூர் ஆகிய இடங்களில் மின்உற்பத்தி திட்டம் மூலம் வரும் 6 மாதங்களில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
தமிழகத்தில் தற்போது தனிநபர் மின் நுகர்வு 8 சதவிதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் வழக்கமாக அதிகபட்சமாக மின்நுகர்வு நேரம் மாலை 6 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை இருந்தது. தற்போது அந்த நேரம் மாறி இரவு 11 மணிக்கு மேல் அதிகம் மின்நுகர்வு செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் 2,500 மெகாவாட் வரை மின்சாரம் உபயோகிக்கப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியின் முதுகெலும்பாக தமிழகத்தில் வரவிருக்கும் கயத்தாறு, ஓசூர், தர்மபுரி திட்டங்கள் அமையும். இதன் மூலம் மின்பற்றாக்குறை நீங்கும் என்றார் அவர்.