தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில் காற்றாலைகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் சற்றே கை கொடுத்து வந்தது. ஆனால் காற்றின் வேகம் குறைந்ததால் கடந்த 10 நாட்களாக காற்றாலை மின் உற்பத்தியின் அளவு வெகுவாகக் குறைந்தது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 12 மணிநேரத்திற்கும் அதிகமாக மினவெட்டு ஏற்படுகிறது.
இதனால் மக்கள் மின்வாரத்தியன் மீது உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிலும் குறிப்பாக சென்னையில் சூறாவளிக்காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த சூறாவளிக்காற்றால் காற்றாலைகள் மூலம் 3,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் மின்வெட்டு நேரம் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் காற்றாலைகள் மூலம் மேலும் அதிக அளவு மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் காற்றாலைகளில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவும் குறைந்துவிடும். அதன் பிறகு 3 வாரங்கள் கழித்து தான் வடகிழக்கு பருவமழை காலம் துவங்கும். அதுவரை போதிய மின்சாரம் கிடைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.