
ஏசி வகுப்புகளுக்கான ரயில் சேவை வரி 3 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி முதல் வகுப்பு ஏசி பெட்டி, எக்சிகியூட்டிவ் வகுப்பு, ஏசி 2 டயர், ஏசி 3 டயர், ஏசி சேர் கார் மற்றும் சரக்குக் கட்டணம் ஆகியவை உயர்ந்துள்ளன.
ஏசி முதல் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு பயணிகள் கிட்டத்தட்ட 20 சதவீத கட்டண உயர்வை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் இது அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவை வரி உயர்வால் ரயில்வே துறைக்கு இந்த ஆண்டு கூடுதலாக ரூ. 3000 கோடி வருமானம் கிடைக்கும்.
இதுவரை ரயில் பயணிகளுக்கு முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் கட்டணம் மட்டுமே விதிக்கப்பட்டது. முதல் முறையாக உயர் வகுப்பு ரயில் பயணிகளுக்கு சேவை வரியாக 3.7 சதவீதம் வசூலிக்க ரயில்வே துறை முடிவு செய்து அதை இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதனால் ஏ.சி. முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு ஏ.சி., 3 அடுக்கு ஏ.சி. கட்டணம் உயர்ந்தது. சேவை வரி கட்டணம் உயர் வகுப்பு பயணிகளுக்கு வசூலிக்கப்படுவதால் முதல் வகுப்பு ஏ.சி. கட்டணம் ரூ. 30 முதல் உயர்ந்துள்ளது. 2 அடுக்கு படுக்கை குளிர்சாதன வசதி கட்டணம் ரூ. 50 முதல் வரையிலும் 3 அடுக்கு படுக்கை ஏ.சி. கட்டணம் ரூ. 30 முதல் வரையிலும் உயர்ந்துள்ளது.
இந்த கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தாலும் 4 மாதத்திற்கு முன்பு டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கும் இது பொருந்தும். ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் கூடுதல் கட்டணத்தை பயணத்தின்போது செலுத்த வேண்டும்.
ஏற்கனவே விமான பயணத்திற்கு சேவை கட்டணம் உள்ளது. அதுபோல உயர் வகுப்பு ரயில் பயணிகளுக்கும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. புதிதாக சேவை வரி விதிக்கப்பட்டு இருப்பதால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, பெங்களூர், கோவை போன்ற இடங்களுக்கு செல்வதற்கான கட்டணம் அடிப்படை ரயில் கட்டணத்தில் இருந்து மாறுபட்டுள்ளது.
பயணிகள் ரயில்களைப் போலவே சரக்கு ரயில்களிலும் கூட சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், பெட்ரோலியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications