தேச தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் காந்தி ஜெயந்தி தேசிய விடுமுறை நாளாக அரசு அறிவித்துள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களில் மதுபானம் மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்ய கூடாது. இதை மீறி மதுபான விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொது சபையில் கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி அக்டோபர் 02 ம் தேதி "அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்ககது.