சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து வணிகர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசின் அரசாணையை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளித்த மத்திய அரசின் அரசாணையை எதிர்த்து, காந்தி பிறந்த தினமான இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்படும்.

சென்னையில் மெமோரியல் ஹால் அருகே பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வள்ளுவர் கோட்டத்தில், சுதேசி விழிப்புணர்வு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் இணைந்து காலை முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளன. நம்பிநாராயணன் தலைமையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை, பேரமைப்பு தலைவர் தொடங்கி வைக்கிறார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Protest against foreign investment in retail trade: Merchant association | சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து வணிகர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

Federation of Tamil Nadu merchant's associations has decided to protest against foreign investment in retail trade on today.
Story first published: Tuesday, October 2, 2012, 9:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X