டீசல் விலை உயர்வு: தமிழகத்தில் லாரி வாடகை 20 சதவீதம் அதிகரிப்பு-லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

டீசல் விலை உயர்வு: தமிழகத்தில் லாரி வாடகை 20 சதவீதம் அதிகரிப்பு
நாமக்கல்: டீசல் விலை உயர்வை தொடர்ந்து தமிழகம் முழுவதும் லாரி வாடகையை 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 14ம் தேதி மத்திய அரசு டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 20ம் தேதி நாடு தழுவிய பந்த் நடைபெற்றது. இதையடுத்து டீசல் விலை உயர்வை குறைப்பது குறித்து பரிசீலனை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. அதற்கு 20 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை டீசல் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களின் வாடகையை 20 சதவீதம் உயர்த்த, தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நல்லதம்பி கூறியதாவது,

மத்திய அரசு டீசல் விலையைக் குறைப்பது குறித்து பரிசீலனை செய்ய 20 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இதுவரை டீசல் விலை குறைக்கப்படவில்லை. எனவே தமிழகத்தில் லாரி வாடகையை 20 சதவீதம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+