திருவனந்தபுரம் கே.எப்.சியில் புழுக்கள் நெளியும் சிக்கன்.. கடை மூடல்

திருவனந்தபுரம் கே.எப்.சியில் புழுக்கள் நெளியும் சிக்கன்.. கடை மூடல்
திருவனந்தபுரம்: புழுக்கள் இருந்த சிக்கனை விற்பனை செய்ததாக எழுந்த புகாரை அடுத்து திருவனந்தபுரத்தில் கே.எப்.சி சிக்கன் விற்பனை கடையை மூட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஷாஜூ என்ற நபர் கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய குடும்பத்தினருடனும் உறவினர்களுடனும் திருவனந்தபுரத்தில் உள்ள கே.எப்.சி கடைக்குச் சென்றார். அங்கு சென்று சாப்பிட்ட போது சில நிமிடங்களில் வாந்தி எடுத்தார். இதனையடுத்து அந்த சிக்கனை பரிசோதனை செய்தபோது அதில் இறந்து போன புழுக்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து உணவு மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த கடையில் இருந்த சிக்கன் மற்றும் உணவுப் பொருட்களை சோதனை செய்த போது அவை 5 மாதங்களுக்கு முந்தையவை என்று தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக அந்த கடையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த திருவனந்தபுரம் மாவட்ட உணவுத்துறை அதிகாரி சிவகுமார். கே.எப்.சி சிக்கன் கடையில் விற்பனை செய்யப்படும் உணவு தரமில்லாதவையாக இருப்பதாக புகார் வந்ததை அடுத்து அந்த கடையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+