தமிழில் ரகசிய தீவு என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இந்தப் படம் டைனோசர்கள் பற்றியது.
மார்கோ பிரம்பில்லா இயக்கியுள்ள இந்தப் படம், பல கோடி வருடங்களுக்கு முன் பூமி அழியும் தருணத்தில் வாழ்ந்த மனிதர்கள் மற்றும் டைனோசர்களின் கடைசி நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளதாம்.
டைனடோப்பியா என்ற ஒரு தீவுக்கு வெளிச்சம் தருகிறது சூரிய காந்தி மணி என்ற வினோத மணி. ராட்சத கழுகுகளிடமிருந்தும் அந்தத் தீவைக் காக்கிறது அந்த மணி. ஒரு கட்டத்தில் அந்த மணி செயலிழந்துபோகிறது. உடனே, கடலுக்கடியில் உள்ள இன்னொரு மணியை தேடி எடுத்து வந்து அந்த தீவை காக்கிறார்கள் இரு இளைஞர்கள். இதுதான் படத்தின் கதை.
மனிதர்கள் பேசுவதைப் போலவே, இந்தப் படத்தில் இடம்பெறும் விலங்குகளும் பேசுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
படத்தை ஹாலிவுட்டில் வெளியிடும் முன்பே, இந்தியாவில் வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.