
வீடுகளுக்கு வினியோகிக்கக்கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆண்டுக்கு 6 மட்டுமே மானியத்துடன் வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்களை மானியம் இல்லாமல் வெளிச்சந்தை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்றும் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.
இதனையடுத்து மானியம் இல்லாத சமையல் எரிவாயு விலை, மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்துக்கான, வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை, சிலிண்டருக்கு ரூ.26.50 உயர்த்தப்படுவதாகவும், இதனால் அதன் விலை ரூ.922 ஆக உயர்வதாகவும் வியாழக்கிழமை காலையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விலை உயர்வை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு நேற்று இரவு திடீரென அறிவித்தது. இதனால், முந்தைய மாத விலைக்கே இந்த சிலிண்டர் கிடைக்கும். ஆனால் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம் இல்லாத சிலிண்டருக்கு விலை உயர்வு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இத்தகவலை பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் அறிவித்தார்
மத்திய அரசின் இந்த திடீர் முடிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மானியம் இல்லாத சிலிண்டர் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதற்கு கூட்டணிக் கட்சியில் அங்கம் வகிக்கும் திமுக, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் மாயாவதி, முலாயம் சிங் யாதவ் ஆகியோரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாகவும் இரவோடு இரவாக உயர்த்தப்பட்ட விலையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்கட்சிகள் மட்டுமல்லாது கூட்டணிக் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் இந்த பிரச்சினையை எழுப்பும் என்று நினைத்து மத்திய அரசு இந்த விலை உயர்வை நிறுத்திவைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
More From GoodReturns

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னை, பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடல்!! அப்போ வீட்டு உபயோக சிலிண்டர் நிலைமை?

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

எல்பிஜி பற்றாக்குறை.. பிணங்கள் எரியூட்டு தகன மேடைகள் மூடப்பட்டது.. நிலைமை மோசமாகிறதா..?!

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications