வினாத்தாள் லீக் - டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மறுதேர்வு இன்று நடைபெறுகிறது

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வினாத்தாள் லீக் ஆனதான் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மறுதேர்வு இன்று மீண்டும் நடைபெற்று வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு மூலம் நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர், உதவி வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, கூட்டுறவு தணிக்கை அதிகாரி, வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்காக 3,687 காலி பணி இடங்கள் நிரப்பபப்டுகிறது.

வினாத்தாள் லீக்- தேர்வு ரத்து

இப் பணிகளுக்கான தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி நடைபெற்றது. ஆனால் வினாத்தாள் அவுட் ஆனது அம்பலமானதால் 6 லட்சம் பேர் எழுதிய தேர்வு ரத்து செய்யப்பட்டது.

மறுதேர்வு

இதனால் இன்று மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்களுக்கு புதிதாக ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, குரூப் 2 மறுதேர்வு இன்று தமிழகம் முழுவதும் 114 மையங்களில் நடைபெறுகிறது. 3,456 தேர்வுக்கூடங்களில் 6 லட்சம் பேர் தேர்வில் கலந்துகொண்டுள்ளனர்.

முறைகேடு நடக்கும் அபாயம் உள்ள 100 மையங்கள் அடையாளம் காணப்பட்டு ஆன்லைனில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cancelled TNPSC group II exam on November today | வினாத்தாள் அவுட் ஆனதால் இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மறுதேர்வு

The Tamil Nadu Public Service Commission today conduted Group II re-examinations.
Story first published: Sunday, November 4, 2012, 10:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X