சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாட்டை போக்க, மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரத்தை அளிக்கமாறு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமரிடம் கோரிக்கை விடுக்க போவதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துளார்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி இன்று காலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு, பகல் நேரத்தில் 200 மெகா வாட்டும், இரவு நேரத்தில் 766 மெகா வாட்டும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இது தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டிற்கு போதுமானதாக இல்லை. இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக 3,500 மெகா வாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமரை சந்தித்து பேச உள்ளோம்.
மத்திய தொகுப்பில் இருந்து அனுப்பப்படும் மின்சாரம், சில மாநிலங்களில் இருந்து தேவைக்கு போக மீதமுள்ள மின்சாரம் திரும்ப அனுப்பப்படுகிறது. அதை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மற்ற மாநிலங்களில் உபரியாக கிடைக்கும் மின்சாரத்தை தென் மாநிலங்களுக்கு வழங்க தகுந்த மின் பாதை இல்லை. தற்போது உள்ள மின் பாதை பழமையானதாகவும், பழுதடைந்தும் காணப்படுகிறது. இதனால் நவீன முறைகளை பயன்படுத்தி தென் மாநிலங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்திற்கு மட்டுமே வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்க உள்ளோம். மின் உற்பத்திக்கு தேவையான பணிகள் முடிந்துள்ள நிலையில், இந்த மாத இறுதியில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்கும்.
காங்கிரஸ் கட்சியினர் மீது குற்றச்சாட்டுகளை கூறி வரும் சுப்பிரமணியசாமி ஒரு விளம்பர பிரியர். அவரது குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளோம். அதேபோல அன்னா ஹசாரே குழுவினர் ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
காமன்வெல்த் போட்டி நடைபெற்ற போது எழுந்த புகார் தொடர்பாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் கூறி வந்தால் மானநஷ்ட வழக்கு தொடருவோம்.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் வரும் 2014ல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்பது தெளிவாக தெரிகிறது என்றார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications