Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
டெல்லி: நாட்டில் அன்னிய முதலீட்டை ஈர்க்கும் வகையில் வரிவிதிப்பு மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன்சிங், தற்போது நடைமுறையில் உள்ள கடுமையான வரி விதிப்பு முறைகள், அன்னிய முதலீட்டாளர்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது. விரைவில் முதலீட்டாளர்களின் அச்சங்கள் அகற்றப்பட்டு, அன்னிய முதலீட்டை அதிக அளவு ஈர்ப்பதற்கு உகந்த சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.
இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதுவும் அன்னிய முதலீட்டாளர்களின் தயக்கத்துக்குக் காரணம். உள்நாட்டில் புதிய தொழில் வாய்ப்பு, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதுவே நமக்கு இப்போதுள்ள சவால். ஏழை, எளிய மக்களின் வாழ்வைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார் மன்மோகன்சிங்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Manmohan Singh bats for reforms, says ignore naysayers | அன்னிய முதலீட்டை ஈர்க்க உகந்த சூழலை உருவாக்குவோம்: பிரதமர் மன்மோகன்சிங்
Story first published: Sunday, November 11, 2012, 16:34 [IST]