2011ல் வெளிநாட்டு பயணிகள் மூலம் ரூ.77,591 கோடி வருவாய்: சிரஞ்சீவி

By Mayura Akilan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2011ல் வெளிநாட்டு பயணிகள் மூலம் ரூ.77,591 கோடி வருவாய்: சிரஞ்சீவி
டெல்லி: இந்தியாவிற்கு வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் வருகையின் மூலம் 2011ம் ஆண்டு ரூ.77,591 கோடி ரூபாய் அந்நிய செலவாணி கிடைத்துள்ளதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் சிரஞ்சீவி கூறியுள்ளதாவது:

இந்தியாவுக்கு கடந்த 2011 ம் வருடத்தில் மட்டும் 6.31 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது அதற்கு முன்னர் இருந்ததை விட அதிகம்.

அதற்கு முந்தைய ஆண்டு 5.78 மில்லியன் வெளிநாட்டு பயணிகளும், 2009 ம் ஆண்டு 5.17 மில்லியன் பயணிகளும் இங்கே சுற்றுலா வந்துள்ளனர். 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில், 2011ம் வருடம் 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவர் என எதிர்பார்க்கும் வகையில் திட்டம் தீட்டப் பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் மற்றொரு கேள்விக்கு பதிலளித்துள்ள சிரஞ்சீவி, 2010ம் ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகையின் மூலம் 64,889 கோடி ரூபாய் அந்நியச் செலவாணி கிடைத்துள்ளது. 2011ம் ஆண்டு 77,591 கோடி ரூபாயும், நடப்பாண்டு ஜனவரி தொடங்கி அக்டோபர் வரை 74,215 கோடி ரூபாய் சுற்றுலா பயணிகள் மூலம் அந்நியச் செலவாணி கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6.31 foreign tourists arrived in India in 2011 | 2011ல் வெளிநாட்டு பயணிகள் மூலம் ரூ.77,591 கோடி வருவாய்: சிரஞ்சீவி

Tourism Minister K Chiranjeevi said in a written reply in Rajya Sabha, the foreign exchange earnings in India through tourism during 2010, 2011 and January to October 2012 were Rs 64,889 crore, Rs 77,591 crore and Rs 74,215 crore respectively.
Story first published: Thursday, November 22, 2012, 15:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X