
தூத்துக்குடி, ராமேஸ்வரம், குமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மீனவர்கள் பிடித்து வரும் இறால்கள், கணவா மீன்கள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதியாளர்கள் மொத்தமாக கொள்முதல் செய்து பதப்படுத்தி அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இவை பெரும்பாலும் தூத்துக்குடியில் உள்ள கடல் உணவு தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்த ஆலைகளில் மீன்களை சுத்தம் செய்யவும், அங்குள்ள குளிர்பதன நிலையங்களில் மைனஸ் 24 டிகிரி உறை நிலையில் மீன்களை பதப்படுத்தி வைக்கவும் நிலத்தடி நீர் தேவைப்படுகிறது. இதற்காக ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர் வட்டாரங்களில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது நிலத்தடி நீரை எடுக்க தூத்துக்குடி கலெக்டர் ஆசிஷ் குமார் தடை விதித்துள்ளார். இதனால் கடந்த ஒரு மாத காலமாக மீன் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. இதையடுத்து கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, தருவைகுளம், கல்மேடு, காயல்பட்டிணம், மறவன்மடம் உள்ளிட்ட பகுதிகளில் 18 மீன் உணவு பதப்படுத்தும் ஆலைகள் செயல்படுகின்றன. நாள் ஒன்றுக்கு ஒரு ஆலையில் 20 முதல் 40 டன் வரை இறால் மீன்கள் மீனவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. நிலத்தடி நீர் எடுக்க விதிக்கப்பட்ட தடையால் மீன் உணவு பதப்படுத்தும் தொழில் முடங்கியுள்ளது. இதனால் இனி இறால் மீன்களை கொள்முதல் செய்வதற்கு வாய்ப்பு இல்லை என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொள்முதல் இல்லாத நிலையில் மீன்கள் பிடித்தும் கூட அவற்றுக்கு போதிய வருவாய் இல்லாததால் தூத்துக்குடியிலிருந்து கோடியக்கரை வரை பெரும்பாலான மீனவர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications