மீண்டும் ஸ்பெக்ட்ரம் ஏலம்- ரூ 20 ஆயிரம் கோடி கிடைக்கும் என அரசு நம்பிக்கை

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்பெக்ட்ரம் மறு ஏலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கிடைக்கும்- மத்திய அரசு
டெல்லி: 2ஜி ஸ்பெக்டெரம் அலைவரிசைக்கான 2-ம் கட்ட ஏலத்தின் மூலமாக அரசுக்கு ரூ20 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று தொலைத்தொடர்புத் துறை செயலாளர் சந்திரசேகர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்தின் போது டெல்லி, மும்பை, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மண்டலங்கள் விலைபோகவில்லை. இதற்குக் காரணம் மண்டலங்களில் ஏலம் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைத் தொகை அதிகமாக இருக்கிறது என்பதுதான்!

 

கடந்த ஏலத்தின்போது டெல்லி மண்டலத்திற்கு ரூ.693.06 கோடி, மும்பைக்கு ரூ.678.45 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.330.12 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.67.08 கோடி அடிப்படைவிலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது மிகவும் அதிகம் என நிறுவனங்கள் கருதியதால் விலை போகவில்லை.

 

இதனால் அடிப்படை விலையில் 30% - ஐ குறைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் தெரிவித்தது. இதனால் விடுபட்ட மண்டலங்களுக்கு 2-ம் கட்டமாக ஏலம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சந்திரசேகர், இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு சுமார் ரூ20 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். ஏற்கெனவே ஏலத்தில் கலந்து கொண்ட நிறுவனங்களே இந்த ஏலத்திலும் பங்கேற்கும் என்று கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government expects Rs 20000 crore from next round of spectrum auction | ஸ்பெக்ட்ரம் மறு ஏலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கிடைக்கும்- மத்திய அரசு

The government is expecting Rs 20,000 crore from the second round of spectrum auction later this fiscal, Telecom Secretary R Chandrashekhar said on Friday.
Story first published: Friday, December 14, 2012, 18:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X