செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணி விரைவில் முடிக்கப்படும்: மத்திய ரயில்வே இணை அமைச்சர்

செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணி விரைவில் முடிக்கப்படும்: மத்திய ரயில்வே இணை அமைச்சர்
HDFC Bank: Quotes, News
BSE 795.80BSE Quote0.4 (-0.05%)
NSE 795.45NSE Quote4.45 (-0.56%)
INR
Indices
Sensex78,617.16Sensex Quote96.86 [0.12%]
கொல்லம்: செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணி விரைவில் முடிக்கப்படும் என மத்திய ரயில்வே இணை அமைச்சர் கோட்லா ஜெயசூரிய பிரகாஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் கோட்லா ஜெயசூரிய பிரகாஷ் ரெட்டி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணிகள் தாமதமாக நடந்து வருவதாகவும், கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பணிகள் தாமதம் ஆவதற்கு சுரங்கப் பாதை பணிகள் தான் காரணம் என்று கூறினார்கள். அப்படி கூறுவது தவறு. இதை விட அதிக சுரங்கங்கள் உள்ள காஷ்மீரில் ரயில் பாதை உள்ளது. அங்கு பணிகள் விரைவாக நடைபெறவில்லையா.

செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்கு முன்பு ஒதுக்கிய நிதி போதாது என்றும், கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளீர்கள். கூடுதல் நிதி விரைவில் ஒதுக்கப்படும். அகல ரயில் பாதை பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

கொல்லம்-மதுரை ரயிலை புனலூர் வரை (நெல்லை,திருவனந்தபுரம் வழியாக) நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். உங்கள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். கொல்லம்-மதுரை கோட்டத்தில் கூடுதலாக 200 ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+