சிங்கப்பூரில் 300க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுடன் சிதம்பரம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வருவாயை அதிகரிப்பதன் மூலம் நிதிப் பற்றாக்குறையை 3% குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரி இனங்களை விரிவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இதனால் ஜிடிபியில் வரி வருவாயின் பங்கு அதிகரிக்கும். 2015-16-ல் 8% பொருளாதார வளர்ச்சியை எட்டுவோம். என்னைப் பொறுத்தவரையில் நிலையான வரி விகிதங்களே அவசியம் எனக் கருதுகிறேன். இருப்பினும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப அரசுக்கு தேவைப்படும் நிலையில் கூடுதல் வருவாய்க்காக இந்த வரி விகிதங்கள் மாற்றப்படலாம் என்பது என் கருத்து. தற்போது "விவாதிக்கப்பட்டு" வரக் கூடிய மிகப் பெரும் பணக்காரர்களிடம் சற்று கூடுதலாக வரி கட்ட சொல்வது போன்றவற்றையும் நாம் பரிசீலிக்கலாம் என்றார் சிதம்பரம்.
மேலும் தற்போதைய வரி விகிதங்கள் அனைத்தும் 1997-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 4 பிரதமர்கள், 4 நிதி அமைச்சர்கள் வந்து போய்விட்டனர் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார் ப.சிதம்பரம். முன்னதாக ஹாங்காங் முதலீட்டாளர்களுடன் சிதம்பரம் செவ்வாய்க்கிழமையன்று உரையாடினார். அப்போது, நிதிப் பற்றாக்குறை 2013-14 நிதியாண்டில் இது 4.8% குறையும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.