சுமார் ரூ.5.5 லட்சம் கோடி மதிப்புள்ள டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் இருந்த ரத்தன் டாடா கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் ஓய்வுக்கு பின் வாழ்கைக எப்படி உள்ளது என்பதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அவருடைய ட்வீட்:
பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற சில வாரங்களில் வாழ்க்கை மிக அருமையாக உள்ளது. வீட்டில் அதிக நேரம் இருக்க முடிகிறது, நாய்களுடன் விளையாட முடிகிறது. மேலும் முன்பெல்லாம் நேரமில்லாததால் செய்ய முடியாதவற்றை எல்லாம் தற்போது செய்ய முடிகிறது. இன்னும் சில நாட்களில் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு தேவையான விஷயங்களில் கவனம் செலுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.
ரத்தன் டாடா தலைவராக இருந்த காலத்தில் டாடா மோட்டார்ஸ் ஜாக்குவார் லேண்ட் ரோவரையும், டாடா ஸ்டீல் கோரஸையும், டாடா டீ டெட்லியையும் வாங்கியது.