வாங்கியதிலிருந்தே பிரச்சனை: ட்ரீம்லைனர் விமானங்களை விற்கும் ஏர் இந்தியா

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாங்கியதிலிருந்தே பிரச்சனை: ட்ரீம்லைனர்களை விற்கும் ஏர் இந்தியா
டெல்லி: போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களை வாங்கியதில் இருந்தே பிரச்சனையாக இருப்பதால் அவற்றை விற்க, லீசுக்கு விட ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் விண்ணபிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

போயிங் 787 ரக விமானங்கள் திடீர் என்று தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால் அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில் ஏர் இந்தியா தன்னிடம் உள்ள 27 போயிங் 787-8 ரக விமானங்களை விற்கவும், லீசுக்கு விடவும் முடுவு செய்துள்ளனது. அவற்றை லீசுக்கு எடுக்க விரும்புவோர் வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போயிங் விமானங்களை 12 ஆண்டுகளுக்கு லீசுக்கு விடவிருக்கிறது ஏர் இந்தியா. லீசுக்கு எடுப்பவர்கள் தேவைப்பட்டால் 12 ஆண்டுகளை விட அதிகமாக பயன்படுத்தவும் அது அனுமதிக்கும். லீசுக்கு விட்டால் வருமானமும் வரும், வரிவிலக்கும் கிடைக்கும் என்று நினைத்து ஏர் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.

ஏர் இந்தியாவின் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air India puts its Dreamliner planes for sale, leaseback; invites bids | வாங்கியதிலிருந்தே பிரச்சனை: ட்ரீம்லைனர்களை விற்கும் ஏர் இந்தியா

Air India has put all its newly-acquired Boeing 787-8 Dreamliner planes for sale and leaseback. It has invited bids from prospective lessors by the first week of February.
Story first published: Tuesday, January 29, 2013, 16:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X