விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது என்றாலும் விலை உயர்ந்த பொருட்கள், ஆடம்பர பொருட்களின் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. இந்நிலையில் வரும் 2015ம் ஆண்டில் சொகுசு கார், வைரம் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களின் விற்பனை ரூ.75,000 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 2013ல் ஆடம்பர பொருட்கள் விற்பனை ரூ.41,050 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர பெண்களுக்கான கைப்பைகளை தயாரிக்கும் ஜுடித் லெய்பர் போன்ற நிறுவனங்கள் இந்திய ஆடம்பர பொருட்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஜுடித் லெய்பர் ஆண்டுக்கு நாடு முழுவதும் வெறும் 300 கைப்பைகளை விற்பனை செய்கிறது. ஆனால் அதன் கைப்பைகள் ரூ. 25,000 முதல் ரூ. 3 லட்சம் வரை விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.