ஒரே நாளில் ரூ1.81 லட்சம் கோடி- வங்கிகளுக்கு கடனாகக் கொடுத்தது ரிசர்வ் வங்கி!

(4 top equity mutual fund picks)
பொதுவாக வங்கிகள் தங்களுக்கான நிதியை ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடனாகப் பெற்றுக் கொள்வது வழக்கம். நடைமுறையில் வங்கிகளின் முதலீடுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதம் 6.5%. ரிசர்வ் வங்கியிடம் இருந்து நீண்டகால அடிப்படையில் வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.5%. குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 7.5%.என இருந்து வருகிறது.
2012-13 ஆம் நிதி ஆண்டின் கடைசி நாள் என்பதால் மார்ச் 31- ந்தேதியன்று மட்டும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மற்ற நாட்களைப் போல் இல்லாமல் ஒரே நாளில் அதிக தொகையை வங்கிகள் கடன் வாங்கியிருக்கின்றன.மார்ச் 31-ந் தேதியன்று மட்டும் ரூ1.81 லட்சம் கோடியை கடனாக வங்கிகளுக்குக் கொடுத்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இதில் குறுகிய கால கடன் என்ற அடிப்படையில் ரூ7 ஆயிரம் கோடியை வங்கிகள் பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications