டெல்லி: ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 2.1 சதவீதம் அதிகரித்து 13.87 லட்சமாக உயர்ந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் சிரஞ்சீவி கூறியுள்ளார். இதன்மூலம் வருவாய் 20.2 சதவீதம் உயர்ந்து ரூ.20,584 கோடியை எட்டியுள்ளது என்றார்.
அவர் கூறுகையில், சென்ற ஆண்டின் இதே மாதங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 13.59 லட்சமாக இருந்தது.
ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடி, உள்நாட்டில் விமான கட்டணங்கள் அதிகரிப்பு, மேலும் டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்தால் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது போன்றவற்றால் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பயணிகள் வருகை குறைந்துள்ளது.
அதே நேரத்தில் கனடா, அமெரிக்கா, ரஷ்யா நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் வருகை அதிகமாகவே உள்ளது.
Share This Article
English summary
Foreign tourist influx rising, tourism minister says | 2 மாதங்களில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை 2.1% அதிகரிப்பு
Describing the recent spate of incidents involving foreigners as "unfortunate'' tourism minister K Chiranjeevi said that foreign tourist arrivals had not declined but had shown a growth.
Story first published: Thursday, April 4, 2013, 13:04 [IST]
Other articles published on
Apr 4, 2013