2012, டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தில் 7.24 சதவீத பங்குகளை எல்.ஐ.சி. நிறுவனம் வைத்திருந்தது.
ஆனால் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பை சரியாக ஆராய்ந்த எல்ஐசி நிறுவனம், அந்த பங்குகளின் விலை உயர்ந்த நேரத்தைப் பயன்படுத்தி தனது பங்குகளை விற்று நல்ல லாபத்தைப் பெற்றிருக்கிறது. அதாவது கடந்த ஜனவரி 12ம் தேதி இன்போசிஸ் தனது 3வது காலாண்டு முடிவுகளை அறிவித்த பிறகு அதன் பங்குகளின் மதிப்பு 18 சதவீதம் வரை உயர்ந்தது. இந்த நேரத்தை எல்ஐசி நிறுவனம் பயன்படுத்திக் கொண்டது.
எனவே 2013ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை எல்ஐசி நிறுவனம் இன்போசிஸ் நிறுவனத்தில் தான் வைத்திருந்த பங்குகளில் ரூ.2000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று அதிக லாபம் பெற்றிருக்கிறது.
இன்போசிஸ் இன்று தனது 4வது காலாண்டு முடிவுகளை அறிவித்த பிறகு அதன் பங்குகள் ஏறக்குறைய 20 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. உண்மையிலேயே எல்ஐசி நிறுவனம் தெளிவு தான்.