5ல் 3 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் கட்டிடங்களை விற்பதற்காக அதிகப்படியான தள்ளுபடியையும் மற்றும் பணத்தைத் திருப்பித் தரும் திட்டங்களையும் களமிறக்குகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அரசிடமிருந்து ஒப்புதல் ஆணை பெறுவதற்கு முன்பே ஒரு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் கட்டிடங்களை வாங்க முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு அதிகப்படியான தள்ளுபடியை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கின்றன.
அதுபோல் மாதம் தோறும் ஒரு குறிப்பட்ட தொகையை வழங்கும் ரியல் எஸ்டேட் திட்டத்தில் சேருபவர்களுக்கும் அவர்கள் வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர். எனினும் அதற்காக தங்கள் சொத்துக்களை வாடகைக்கு விடுகின்றனர் அல்லது குத்தகைக்கு விடுகின்றனர்.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களில் முதலீடு செய்வது வாடிக்கையாளர்களுக்கு லாபகரமான சொத்தை தரும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் அவ்வாறு திட்டங்களில் சேருவதற்கு முன்பாக அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் நம்பகத்தன்மை கொண்டதா என்றும், அவர்கள் வழங்கும் அனைத்து பயன்களையும் தீர ஆராய்ந்து சேர்வது நல்லது. குறிப்பாக ரியல் எஸ்டேட் அஷ்யூர்டு ரிட்டர்ன் திட்டத்தில் சேர்பவர்களுக்கு 10 முதல் 12 சதவீத வட்டி வழங்குகின்றன.
உதாரணமாக, நீங்கள் நவி மும்பையில் ஒரு சதுர அடி ரூ.10,000 என்ற கணக்கில் 1000 சதுர அடி கொண்ட ஒரு கட்டிடத்தை ரூ.1 கோடிக்கு வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த கட்டிடம் முழுமையாக உங்கள் வசம் வருவதற்கு முன்பாக, ரியல் எஸ்டேட் நிறுவனம் 10 சதவீத வட்டியை வழங்குவதாக உறுதியளித்திருக்கிறது என்றால் அந்த நிறுவனம் உங்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.