3ஜி அலைவரிசை சேவையை வழங்குவதில் விதிமுறைகளை மீறியதற்காக ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா செல்லுலர் போன்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு எதிரான நோட்டீஸை தொலைத் தொடர்புத்துறை தயாரித்து வருகிறது.
தொலைத் தொடர்புத்துறை தயாரித்து வரும் நோட்டீஸ், மேற்சொன்ன நிறுவனங்களின் பின்வரும் குற்றங்களை சுட்டிக் காட்டுகிறது. அதாவது தொலைத் தொடர்பு சேவையை வழங்க அரசு உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தொலைத் தொடர்பு சேவைக்கான யுஎஸ் உரிமத்தின் 3ஜி ஐசிஆர் விதிமுறைகளை மீறி 3ஜி ஸ்பெக்ட்ரத்தைப் பயன்படுத்தி இருக்கின்றன என்பதாகும். இதை தொலைத் தொடர்புத்துறையின் நம்பத் தகுந்த தகவல்கள் வெளியிட்டுள்ளன.
இதற்கு முன்பு, ஐடியா செல்லுலர், வோடாபோன் மற்றும் பாரதி நிறுவனங்களின் யுஎஸ் உரிமத்துக்காக தயாரிக்கப்பட்டது. குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில பகுதிகளில் 3ஜி ஸ்பெக்ட்ரம் சேவையை வழங்க வோடாபோன் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த சேவையை வழங்குவதில் வோடாபோன் நிறுவனம் விதிமுறைகளை மீறிவிட்டது. அதனால் அந்த நிறுவனத்திற்கு எதிரான நோட்டீஸை மிகத் தீவிரமாக தொலைத் தொடர்புத்துறை தயாரித்து வருகிறது.
மேலும் டெல்லி,சென்னை, கிழக்கு உத்திரபிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் கொல்கொத்தா போன்ற பகுதிகளிலும் 3ஜி சேவையை வழங்குவதில் வோடாபோன் அரசு விதிமுறைகளை மீறியிருக்கிறது. விரைவில் தொலைத் தொடர்புத்துறை வோடாபோன் நிறுவனத்திற்கு நோட்டீஸை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
அதுபோல் அஸ்ஸாம், பீகார், கர்நாடகா, மும்பை, மேற்கு வங்காளம் மற்றும் மேற்கு உத்திரபிரதேசம் போன்ற பகுதிகளில் 3ஜி சேவையை வழங்குவதில் பார்தி ஏர்டெல் நிறுவனம் அரசு விதிகளை மீறியிருக்கிறது. அதோடு ராஜஸ்தானில் 3ஜி சேவையை இணைந்து வழங்கிய பார்தி ஏர்டெல் உடைய துணை நிறுவனமான பார்தி ஹெக்சகாம் மற்றும் டிசிஐஎல் ஆகிய நிறுவனங்கள் விதிமுறைகளை மீறியுள்ளன.
3ஜி இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் ஒப்பந்தத்தை மீறியதற்காக, பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலர் மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்களுக்கு டேக்கர் என்ற நோட்டீஸை டாட் ஏற்கனவே அனுப்பி இருக்கிறது. ஏர்வேவ்ஸ் வசிதி இல்லாமல் தனது வாடிக்கையாளர்களுக்கு 3ஜி சேவையை வழங்கியதற்காக இந்த டேக்கர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸுக்கு மேற்சொன்ன தொலைத் தொடர்பு நிறுவனங்கள் என்ன பதிலளிக்கப் போக்கின்றன என்பது போகப் போகத் தெரியும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications