வருமானவரி ரெய்டுகளை நிறுத்துச் சொல்லும் நிதியமைச்சர்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமானவரி ரெய்டுகளை நிறுத்துச் சொல்லும் நிதியமைச்சர்
மிகச் சரியான ஆதாரங்கள் இல்லாமல் அல்லது யாராவது கொடுக்கும் தகவல்களை வைத்துக் கொண்டு, வருமானவரி செலுத்தாதவர்கள் இடங்களில் ரெய்டு நடத்த வேண்டாம் என்று, இந்திய நிதியமைச்சாரான சிதம்பரம் அவர்கள், வருமானவரித் துறை அலுவலகர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

(Looking for monthly income? Here are few investment options)

 

நிதியமைச்சரின் இந்த அறிவிப்பைப் பற்றி பிசினஸ் ஸ்டான்டர்டு அறிக்கை சொல்லும் போது "வரி கட்டாதவர்களை கண்டறியும் நமது அணுகுமுறையில் தெளிவு இருக்க வேண்டும். வரி கட்டாதவர்களைப் பற்றிய விவரங்கள் நமக்கு ஏராளமாக வருகின்றன. அவர்கள் தங்கள் வரிகளைக் கட்டுவதற்கு இன்னும் நிறைய வாய்ப்புகளை வழங்க வேண்டும். எனவே ரெய்டுகள் அவர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கக்கூடியதாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில் வரி கட்டாதவர்களைப் பற்றிய விவரங்கள் சரியாகக் கிடைக்காத போது அவர்களின் இடங்களில் ரெய்டுகள் தேவைப்படுகின்றன" என்று நிதியமைச்சர் தெரிவித்ததாக அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

 

சமீபத்தில் நடந்த கமிஷனர்கள் மற்றும் வருமானவரித் துறையின் இயக்குநர்கள் கூட்டத்தில் சிதம்பரம் பேசும் போது, வரி செலுத்தாதவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் மற்றும் வரி செலுத்தாதவர்களின் விவரங்களை அதிகமாகப் பெறவும் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இதைப் பற்றி வருமானவரித் துறை அதிகாரி தெரிவிக்கும் போது, வரி செலுத்தும் தனிநபர்களை கண்காணிப்பதைவிட, முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறோம். அதோடு ரியல் எஸ்டேட், அடிப்படைக் கட்டமைப்பு, சுரங்கம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியாவின் நிலைப்பாடு சற்று கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக வோடாபோன், கேட்பெரி, நோக்கியா, ஐபிஎம் இந்தியா, ஷெல், எல்ஜி, கேப்ஜெமினி, ஹெவ்லெட்-பெக்கார்ட், கில்லட் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் வரி செலுத்தாததற்காக அந்த நிறுவனங்களுக்கு வருமானவரித் துறையிடமிருந்து நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2012-13 ஆண்டு வருமானவரி ரெய்டு 422ஆக குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டில் வருமானவரி ரெய்டு 621ஆக இருந்தது. நிதியமைச்சரின் வேண்டுகோளை பின்பற்றினால் இந்த ரெய்டுகளின் எண்ணிக்கை இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Finance minister asks I-T officials to avoid raids

Finance Minister P Chidambaram, who has assured foreign investors of a non-adversarial tax regime in India during his road shows, has now asked Income Tax officials to tread cautiously while chasing tax evaders and avoid raids in case information is available from third-party sources.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X