
(Looking for monthly income? Here are few investment options)
நிதியமைச்சரின் இந்த அறிவிப்பைப் பற்றி பிசினஸ் ஸ்டான்டர்டு அறிக்கை சொல்லும் போது "வரி கட்டாதவர்களை கண்டறியும் நமது அணுகுமுறையில் தெளிவு இருக்க வேண்டும். வரி கட்டாதவர்களைப் பற்றிய விவரங்கள் நமக்கு ஏராளமாக வருகின்றன. அவர்கள் தங்கள் வரிகளைக் கட்டுவதற்கு இன்னும் நிறைய வாய்ப்புகளை வழங்க வேண்டும். எனவே ரெய்டுகள் அவர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கக்கூடியதாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில் வரி கட்டாதவர்களைப் பற்றிய விவரங்கள் சரியாகக் கிடைக்காத போது அவர்களின் இடங்களில் ரெய்டுகள் தேவைப்படுகின்றன" என்று நிதியமைச்சர் தெரிவித்ததாக அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.
சமீபத்தில் நடந்த கமிஷனர்கள் மற்றும் வருமானவரித் துறையின் இயக்குநர்கள் கூட்டத்தில் சிதம்பரம் பேசும் போது, வரி செலுத்தாதவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் மற்றும் வரி செலுத்தாதவர்களின் விவரங்களை அதிகமாகப் பெறவும் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இதைப் பற்றி வருமானவரித் துறை அதிகாரி தெரிவிக்கும் போது, வரி செலுத்தும் தனிநபர்களை கண்காணிப்பதைவிட, முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறோம். அதோடு ரியல் எஸ்டேட், அடிப்படைக் கட்டமைப்பு, சுரங்கம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியாவின் நிலைப்பாடு சற்று கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக வோடாபோன், கேட்பெரி, நோக்கியா, ஐபிஎம் இந்தியா, ஷெல், எல்ஜி, கேப்ஜெமினி, ஹெவ்லெட்-பெக்கார்ட், கில்லட் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் வரி செலுத்தாததற்காக அந்த நிறுவனங்களுக்கு வருமானவரித் துறையிடமிருந்து நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2012-13 ஆண்டு வருமானவரி ரெய்டு 422ஆக குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டில் வருமானவரி ரெய்டு 621ஆக இருந்தது. நிதியமைச்சரின் வேண்டுகோளை பின்பற்றினால் இந்த ரெய்டுகளின் எண்ணிக்கை இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications