"ஜூன் முதல் தேதியிலிருந்து இருந்து, நாம் கேஒய்சி படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்காத வாடிக்கையாளர்கள் மற்றும் பல இணைப்புகளை வைத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு எல்பிஜி சிலிண்டர்களை வழங்குவதை நிறுத்தி விட்டொம் ", என டிஜிஎம் (எல்பிஜி), டி கே சஹா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மேலும் அவரது அறிக்கையில், படிவங்கள் பூர்த்தி செய்து கொடுக்காத மற்றும் நுகர்வோர் எண் தடை செய்யப்பட்டிருந்தால், அதற்கு மானியம் அல்லாத சிலிண்டர்கள் உட்பட எவ்வித பரிவர்த்தணையும் அனுமதிக்கபடமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஓசி மானியம் அல்லாத, மற்றும் வணிக ரீதியான சிலிண்டர்களின் விலையை முறையே ரூ 45 மற்றும் ரூ 74.50 அளவிற்கு குறைத்துள்ளது. ஆனால் மானிய விலை சிலிண்டர்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
எனினும், பிபிசிஎல் மற்றும் ஹச்பிசில் போன்ற நிறுவனங்கள் கேஒய்சி படிவத்தை சமர்ப்பிகாத வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிலிண்டர்கள் வழங்கி வருகின்றன. ஆனால் இத்தகைய நிறுவங்களும் கூடிய விரைவில் கேஒய்சி படிவத்தை சமர்ப்பிகாத வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் தருவதை நிறுத்தி விடும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.