அதன்படி ஏற்கனவே டெபிட் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கும் மற்றும் புதிய டெபிட் கார்டுகளை விண்ணப்பித்தவர்களும், வரும் ஜூன் 30 முதல் பின் மற்றும் சிப் வசதி கொண்ட டெபிட் கார்டுகள் வழங்கப்பட இருக்கின்றன.
புதிய டெபிட் கார்டுகளில் இருக்கும் சிப் ஒருவரின் வங்கித் தகவல்களை மிகப் பாதுகாப்பாக கையாளும். மேலும் அந்த கார்டுகளில் இருக்கும் பின், அந்த கார்டுகளை வைத்திருப்போரின் வங்கி நடவடிக்கைகளின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும்.
எனவே தற்போது நவைத்திருக்கும் டெபிட் கார்டுகள் மேற்சொன்ன இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி இல்லை என்றால், மிக விரைவில் புது கார்டுகளைப் பெறவேண்டும். வங்கிகள் ஏற்கனவே இது சம்பந்தமாக வாடிக்கையாளர்களுக்கு இமெயிலை அனுப்பிக் கொண்டிருக்கின்றன.
புதிய கார்டுகளைப் பெற்றவுடன் உங்கள் பழைய கார்டுகள் செயல் இழக்கச் செய்யப்படும்.