
புது வங்கிகளுக்கான லைசென்ஸ்கள் தொடர்பான கேள்விகளுக்குரிய விளக்கத்தை அளித்துள்ள ஆர்பிஐ, விண்ணப்பிக்கும் தகுதி படைத்த நிறுவனங்கள் குறைந்த பட்சம் 51 சதவீத பொதுப் பங்குகளை தன் வசம் வைத்திருத்தல் அவசியம் என்று கூறியுள்ளது. மேலும், "ப்ரொமோட்டர் குழுவின் பகுதியாக விளங்கும் நிறுவனங்கள், அதாவது பொதுமக்கள் சுமார் 51 சதவீதத்திற்குக் குறையாத வோட்டிங் ஈக்விட்டி பங்குகளைக் கொண்டிருக்கும் இந்நிறுவனங்கள், என்ஓஎஃப்ஹெச்ஸி -இன் (ஹோல்டிங் நிறுவனம்) மொத்த வோட்டிங் ஈக்விட்டி பங்குகளில் 51 சதவீதத்திற்குக் குறையாத பங்குகளை வைத்திருக்க வேண்டும்." என்றும் அது கூறியுள்ளது.
மேலும், வங்கி ஆரம்பிக்க உத்தேசித்திருக்கும் விண்ணப்பதாரர்கள், பிற ரெகுலேட்டர்களை அணுகி அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வஸ்துக்களை வங்கி ஹோல்டிங் நிறுவனத்தின் கீழ் கொண்ட வர வேண்டும் என்றும் ஆர்பிஐ வலியுறித்தியுள்ளது. மேலும், ப்ரொமோட்டர் குழுவைச் சேர்ந்த நான்-ஃபைனான்ஷியல் சேவை நிறுவனங்கள் மற்றும் நான்-ஆபரேட்டிவ் ஃபைனான்ஷியல் ஹோல்டிங் நிறுவனங்கள் மட்டுமே ஹோல்டிங் நிறுவனத்தின் பங்குகளை கைக்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளது.
புதிய வங்கி லைசென்ஸ்களுக்கான சட்டதிட்டங்களை பிப்ரவரி மாதத்தில் கொண்டு வந்த போது, சுமார் 500 கோடி ரூபாய் மூலதனமும், குறைந்த பட்சம் 10 வருட ட்ராக் ரெக்கார்டையும் கொண்டிருக்கும் கார்ப்பரேட்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே வங்கி வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுவர் என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது. வங்கி ஒன்றை தொடங்க விழைவோர், அதற்கான விண்ணப்பங்களை ஜூலை 1, 2013 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆர்பிஐ, விண்ணப்பதாரர்களின் பெயர்களை அதன் வலைத்தளத்தில் வெளியிடும். இது வரை சுமார் 34 தனிநபர்கள்/நிறுவனங்களிலிருந்து, இது தொடர்பாக சுமார் 443 வினாக்கள் பெறப்பட்டுள்ளதாக ஆர்பிஐ கூறியுள்ளது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!



Click it and Unblock the Notifications