சென்னை: முன்னனி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா, பொது இன்சூரன்ஸ் நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்சுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நோக்கியா நிறுவன கைப்பேசிகளுக்கு காப்பீடு செய்வது தொடர்பாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, நோக்கியாவின் கிழக்கு மண்டல பொது மேலாளர் கிஸ்லய் குமார் தெரிவிக்கையில்,
முழுமையான திட்டம்
நோக்கியாவின் அனைத்து வகையான கைப்பேசிகளுக்கும் காப்பீடு செய்வதற்காக நியூ இந்தியா ஸ்யூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். முதலில் இந்தத் திட்டம் மேற்கு வங்க மாநிலத்தில் துவங்கப்படும். பிறகு, மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
விரிவாக்கம்
தொடக்கத்தில், நோக்கியாவின் முன்னுரிமை விநியோகஸ்தரிடம் வாங்கப்பட்ட மொபைல் போன்களுக்கு மட்டும் காப்பீடு வழங்கப்படும். பிறகு அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் இந்தக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இன்சூரன்ஸ்
மேலும், கைப்பேசியின் மொத்த விலையில் இருந்து 1.25 சதவிகிதத் தொகையையோ அல்லது 50 ரூபாயோ, இவற்றில் எது அதிகமோ அது காப்பீட்டுக் கட்டணமாக நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்தார்.