வங்கிகளில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது!!- ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கிகளில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது!!- ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
தற்போது இந்தியாவில் சைபர் குற்றங்கள் மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருவதால், வங்கிகள் தங்கள் தகவல் தொடர்பு அமைப்பை (IS - இன்ஃபர்மேசன் சிஸ்டம்) மிகச் சரியான முறையில் பாதுகாத்து பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்று கடந்த புதன் கிழமை அன்று ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் வங்கிகள் வியாபார தொடர் திட்டங்களை (பிசிபி) அமைக்க வேண்டும். அந்த திட்டங்கள் வங்கிகள் கொண்டிருக்கும் எல்லா பாலிசிகள், விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை கவர் செய்கிறதா என்று அடிக்கடி பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அதன் மூலம் வங்கியின் தொடர் செயல்பாடு, கடன்களை திரும்பப் பெறுவது போன்றவற்றை உறுதி செய்ய முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

அதோடு இந்த பிசிபிக்கள், மக்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளுக்கு ஏற்படும் விபத்துகள் ஏற்படாத வகையில் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் அப்படிப்பட்ட விபத்துகள் ஏற்படும் போது, பொருளாதார, சட்டம் மற்றும் இதர இழப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை பிசிபிக்கள் கொண்டிருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

அத்தகைய விபத்துகள் ஏற்படும் போது, அதை எதிர்த்துப் போராடுவதற்கு, மீட்பு நடவடிக்கைகளையும் வங்கிகள் நடத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi bank வங்கிகள்
English summary

RBI warns banks against increasing cyber attacks

The Reserve Bank of india (RBI) on Wednesday asked banks to maintain an up-to-date information system (IS) amid increasing cyber attacks in the country.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X