Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
For Daily Alerts
மூன்று வருடங்களில் எரிவாயு விலைகளில் முதல் திருத்தமாக, அடுத்த வருட ஏப்ரல் மாதத்திலிருந்து இயற்கை வாயுவின் விலையை இரட்டை மடங்காக உயர்த்த அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. இது 8.4 அமெரிக்க டாலராகும். இதனால் எரிசக்தி கட்டணம், யூரியாவின் விலை மற்றும் சி.என்.ஜி. யின் விலை உயரும் அபாயம் உள்ளது.
மன்மோகன் சிங்கின் தலைமையில் செயல்படும் பொருளாதார செயல்களின் கேபினெட் செயற்குழு (சி.சி.ஈ.ஏ) எண்ணெய் அமைச்சகத்தின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அதன் படி பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசகரான சி.ரங்கராஜனின் தலைமையில் இயங்கும் குழுவின் ஆலோசனை படி கடினமான பார்முலாவால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் இயற்கை வாயுவின் விலை நிர்ணயிக்கப்படும்.
இந்த விலை அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் சமமாக இருக்கும். ரங்கராஜனின் கூறுப் படி இந்த விலை மாற்றம் ஏப்ரல் 1, 2014-ல் இருந்து அமுலுக்கு வருகிறது. மேலும் இது ஐந்து வருடங்களுக்கு பொருந்தக்கூடியதாக இருக்கும்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary