கிரெடிட் சூசி, ரூபாய் மதிப்பின் சமீபத்திய போக்கை கவனத்தில் கொண்டு, ஆர்பிஐ ஜூலை மாதம் 30 ஆம் தேதி நடக்கவிருக்கும் அதன் கூட்டத்தில் வட்டி விகிதங்களைக் குறைக்கக்கூடிய வாய்ப்பு பூஜ்யமாகவே இருக்கும் என்றும், மறுபுறம் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி மேலும் தொடர்ந்தால் வட்டி விகிதங்களை அதிகரிக்கக்கூடிய செயல்திட்டத்தை அமலுக்குக் கொண்டு வரலாம் என்றும் கூறியுள்ளது.
"ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியின் விளைவாக ஆர்பிஐ, ஜூலை 30 ஆம் தேதி கூடவிருக்கும் அதன் கூட்டத்தில் வட்டி விகிதங்களை குறைக்கக்கூடிய வாய்ப்பு நடைமுறையில் பூஜ்யமே; மேலும் சுப்பாராவ் அவர்களின் கழுகு போன்ற நடத்தையை வைத்துப் பார்க்கும் போது, வட்டி விகிதங்களை குறைப்பதைக் காட்டிலும் அதை மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயமே மிகவும் அதிகமாக உள்ளது." என்று ஒரு ஆய்வுக் குறிப்பில் கிரெடிட் சூசி குறிப்பிட்டுள்ளது.
பணவீக்கத்தைக் குறித்து கிரெடிட் சூசி கூறுகையில், தற்போதைய நிலையிலேயே ரூபாயின் மதிப்பு நிலைபெற்றிருக்குமாயின், இன்றைய தேதியில் இளக்கத்தோடு காணப்படும் யுஎஸ்டி டிநாமினேட் பயன்பாட்டுப் பொருள்களின் விலைகளையும் கணக்கில் கொண்டு, டபிள்யூபிஐ பணவீக்கமானது சுமார் 50- 70 புள்ளிகள் வரையில் உயரும் என்று தெரிவித்துள்ளது.
எனினும் இவ்வறிக்கை, 1991 ஆம் ஆண்டில் இருந்ததைப் போன்று பாலன்ஸ் ஆஃப் பேமண்ட் (பிஓபி) கிரைசிஸ் மீண்டும் உருவாகலாம் என்று கூறினார்.