
"எழாம் கட்ட விரிவுப்படுத்தும் திட்டத்தின் படி, 4,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளோம். இதில் 8,700 புதிய கோபுரங்களில் 50% சதவித கோபுரங்கள் 3ஜி செயல்பாட்டுக்காக நிறுவப்படும்" என பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர் கே உபாத்யாய் தெரிவித்தார்.
மேலும் அவர் "இந்த விரிவுப்படுத்தும் திட்டம், மார்ச் 2014ல் முடிவடையும் என ஏதிர் பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.
இந்த நிறுவனம் ஏற்கனவே வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் நிறுவ, உபகரணங்களை வாங்குவதற்கான உத்தரவுகளை பிரப்பித்தது, விரைவில் கிழக்கு மண்டலத்திற்கான ஒரு ஒப்பந்தத்தை வெளியிட உள்ளது.
பிஎஸ்என்எல் இந்தியாவின், ஐந்தாம் மிக பெரிய மொபைல் போன் வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனம். மேலும் இது 14.56% பங்குகளை தன்வசம் வைத்துக்கொண்டுள்ளது , மே மாத இறுதில் சுமார் 97.1 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டது என இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் கூறுகிறது.


Click it and Unblock the Notifications