
அமெரிக்காவில் நேற்று யுஎஸ் இந்தியா பிசினஸ் கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) நடத்திய 38வது ஆண்டிறுதி தலைமைத்துவ கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது, இந்த வேண்டுகோளை அவர் விடுத்திருக்கிறார். மேலும் பெரும்பான்மையான ஏழை மக்களை கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தை, வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல இந்திய அரசு பல சவால்களை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் கூறும் போது, இந்திய பொருளாதாரத்தில் இந்திய அரசு கொண்டு வந்த பல சீர்திருத்தங்களின் பயனாக பல இந்திய நிறுவனங்கள் தங்களது அமைப்பு அளவிலும், வர்த்தகத்தக அளவிலும் சிறந்த வளர்ச்சி அடைந்து அமெரிக்க நிறுவனங்களோடு போட்டி போடக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கின்றன. அதன் விளைவாக அமெரிக்காவிற்கும் மற்றும் இந்தியாவிற்கும் இடையே வர்த்தக போட்டி ஏற்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த வர்த்தக போட்டி, சுதந்திரமான சந்தைக்கும் மற்றும் சுதந்திரமான பொருளாதாரத்திற்கும் ஒரு அடித்தளமாக இருக்கும். ஆனால், இந்த வர்த்தக போட்டியை, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவுகளுக்குள் கொண்டு வந்துவிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். எனவே இந்த இரண்டு நாடுகளும் இணைந்து செய்படுவதற்கு இதுவே சிறந்த தருணம் என்று தனது உரையின் முடிவில் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
"இந்திய பொருளாதாரத்தை மெதுவாக படிப்படியாக நாங்கள் கட்டி வருகிறோம். எங்களுடைய இந்த பணியில் உங்களுடைய உதவி தேவை" என்று கூட்டத்திற்கு வந்திருந்த இந்திய மற்றும் அமெரிக்க சட்ட வல்லுனர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோரிடம் சிதம்பரம் தெரிவித்தார்.
"எங்களிடம் மிகப் பெரிய அளவிலான இளைஞர் பட்டாளம் உள்ளது. அந்த பட்டாளம் உயர்ந்த லட்சியத்தை அடைவதற்கான பசியுடன் காத்திருக்கிறது. அந்த பட்டாளம் இன்னும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. எனவே இரண்டு நாடுகளும் இணைந்து வேலை செய்ய வேண்டும்" என்று அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அவ்வாறு இரு நாடுகளும் இணைந்து வேலை செய்தால், மிகப் பெரிய பலன் கிடைக்கும். மேலும் இன்று மற்றும் நாளை நடக்கும் கூட்டங்கள், எதிர் காலத்தில் ஒரு வளமான சமூகத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்கும்" என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அரசு பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் இந்திய நிதயமைச்சர் ப சிதம்பரம் கடந்த 3 நாள்களாக அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் இருக்கிறார். கடந்த 3 நாள்களாக அவர் அமெரிக்க பிரதிநிதகளையும், அமெரிக்க சட்ட வல்லுனர்களையும் மற்றும் அமெரிக்க அரசு அதிகாரிகளையும் சந்தித்து வருகிறார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications