
அமெரிக்காவில் நேற்று யுஎஸ் இந்தியா பிசினஸ் கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) நடத்திய 38வது ஆண்டிறுதி தலைமைத்துவ கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது, இந்த வேண்டுகோளை அவர் விடுத்திருக்கிறார். மேலும் பெரும்பான்மையான ஏழை மக்களை கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தை, வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல இந்திய அரசு பல சவால்களை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் கூறும் போது, இந்திய பொருளாதாரத்தில் இந்திய அரசு கொண்டு வந்த பல சீர்திருத்தங்களின் பயனாக பல இந்திய நிறுவனங்கள் தங்களது அமைப்பு அளவிலும், வர்த்தகத்தக அளவிலும் சிறந்த வளர்ச்சி அடைந்து அமெரிக்க நிறுவனங்களோடு போட்டி போடக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கின்றன. அதன் விளைவாக அமெரிக்காவிற்கும் மற்றும் இந்தியாவிற்கும் இடையே வர்த்தக போட்டி ஏற்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த வர்த்தக போட்டி, சுதந்திரமான சந்தைக்கும் மற்றும் சுதந்திரமான பொருளாதாரத்திற்கும் ஒரு அடித்தளமாக இருக்கும். ஆனால், இந்த வர்த்தக போட்டியை, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவுகளுக்குள் கொண்டு வந்துவிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். எனவே இந்த இரண்டு நாடுகளும் இணைந்து செய்படுவதற்கு இதுவே சிறந்த தருணம் என்று தனது உரையின் முடிவில் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
"இந்திய பொருளாதாரத்தை மெதுவாக படிப்படியாக நாங்கள் கட்டி வருகிறோம். எங்களுடைய இந்த பணியில் உங்களுடைய உதவி தேவை" என்று கூட்டத்திற்கு வந்திருந்த இந்திய மற்றும் அமெரிக்க சட்ட வல்லுனர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோரிடம் சிதம்பரம் தெரிவித்தார்.
"எங்களிடம் மிகப் பெரிய அளவிலான இளைஞர் பட்டாளம் உள்ளது. அந்த பட்டாளம் உயர்ந்த லட்சியத்தை அடைவதற்கான பசியுடன் காத்திருக்கிறது. அந்த பட்டாளம் இன்னும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. எனவே இரண்டு நாடுகளும் இணைந்து வேலை செய்ய வேண்டும்" என்று அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அவ்வாறு இரு நாடுகளும் இணைந்து வேலை செய்தால், மிகப் பெரிய பலன் கிடைக்கும். மேலும் இன்று மற்றும் நாளை நடக்கும் கூட்டங்கள், எதிர் காலத்தில் ஒரு வளமான சமூகத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்கும்" என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அரசு பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் இந்திய நிதயமைச்சர் ப சிதம்பரம் கடந்த 3 நாள்களாக அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் இருக்கிறார். கடந்த 3 நாள்களாக அவர் அமெரிக்க பிரதிநிதகளையும், அமெரிக்க சட்ட வல்லுனர்களையும் மற்றும் அமெரிக்க அரசு அதிகாரிகளையும் சந்தித்து வருகிறார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications